Home

Friday, April 20, 2012

சர்கோஜிக்கு வாக்களிக்க லெப்டினேன்ட் கர்னல் வேண்டுகோள்!

புதுச்சேரி: பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் நிக் கோலா சர்கோஜிக்கு வாக்களிக்க முஹம்மது முஸ்தபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் நிக் கோலா சர்கோஜிக்கு புதுச்சேரி தொகுதி ஆதரவு குழு தலைவர் லெப்டினேன்ட் கர்னல் முஹம்மது முஸ்தபா நிருபர்களிடம் கூறியதாவது:

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் முதல்சுற்று வரும் 22ம் தேதி நடைபெறுகின்றது. இத்தேர்தலில் சர்கோஜி உள்பட 10 பேர் போட்டி யிடுகின்றனர். பிரான்ஸ் சட்டப்படி 50 சதவீதத்திற்கும் மேல் வாக்கு பெறுபவர்களே ஜனாதிபதி ஆக முடியும். முதல் சுற்று தேர்தலில் யாருமே 50 சதவீத வாக்குகளை பெறவில்லை என்றால் 2ம் சுற்று தேர்தல் மே 6ம் தேதி நடத்தப்படும்.

பிரெஞ்ச் குடியுரிமை பெற்று பிரான்ஸ் கோன்சுலாவில் 5 ஆயிரத்து 259 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக புதுச்சேரியில் 4 வாக்குச்சாவடிகளும், காரைக்கால் மற்றும் சென்னையில் தலா ஒரு வாக்குச்சாவடிகளும் வைக்கப்பட்டுள்ளது.

நிகோலா சர்கோஜி கடந்த 2000ம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றபின் புதுச்சேரி லிசே பிரான்சேயில் கடைசி மூன்று வருட கல்வியை இலவசமாக்கினார். வயது முதிர்ந்தவர்களுக்கான நிதியுதவியை அதிகரித்துள்ளார். உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் பிரெஞ்சுக்காரர்களின் பென்ஷனும், சம்பளமும் குறையவில்லை.

வெளிநாடு வாழ் பிரான்ஸ்காரர்களுக்காக ஒரு புதிய அமைச்சகத்தையும் ஏற்படுத்தியதுடன், அந்த அமைச்சரையும் புதுச்சேரி தானே புயலால் பாதிக்கப்பட்டபோது அனுப்பி பார்வையிட செய்தார். எனவே வரும் தேர்தலில் சர்கோஜிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்

No comments:

Post a Comment